'போடி, அது என்னோட நிலா..'
குரலில் வாளுருவி
கூரைவரை எகிறுவான்
குட்டி இளவரசன்
'அப்பா,
என்னோடதுனு சொல்லுப்பா..'என்று
கன்னத்தில்
கோட்டோவியமொன்றுருவாகும்வரை
பிறாண்டுவாள் குட்டி இளவரசி
கரைத்து
புட்டிகளில் ஆளுக்குக்கொஞ்சம்
பகிர்ந்தளிப்பதில் கழியும்
ராணியில்லா அரண்மனையில்
ராஜாவின் தேய்பிறை நாட்கள்.
ராணியற்ற பொழுதுகளின் பதிவு அதன் தாக்கத்தை அழகாகவே காட்டுகிறது.
ReplyDelete