19.9.13

ராணிதிலக்-ன் கவிதை






எழுதிக்கொண்டிருந்தேன்

என்
இருக்கையில் அமர்ந்தபடி
எழுதிக்கொண்டிருந்தேன்
நான்கு
ஐந்து
வார்த்தைகளை
மனம்
வலை வீசிக்கொண்டிருக்க
வெளியே
ஆந்திமந்தாரை மரத்தின்
கீழே
முற்றத்தில்
நான்கு
ஐந்து
மலர்கள்
வீழ்ந்துகொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டு
இருந்தேன்.


No comments:

Post a Comment