29.5.13

ஏழு கவிதைகள்

 
பத்து எறும்புகள்
அணிவகுக்க
ஒரு புழு,
இப்போது ஊர்வது
நூறு புழுக்கள் சேர்ந்ததொரு
சர்ப்பம்.


இறகொன்றின் முனை செலுத்தி
காது குடைய
பறவையொன்று திமிறி
சிறகடிக்கும் சத்தம்.



 புறத்தே
விரிந்த மலர்,
நழுவி விழுகிறது
பீங்கான் கோப்பை
உதிர்கிறதொரு இதழ்.




 
தரை வீழ்ந்த
பழுத்த இலையென
விட்டதில்லை
நடுவில் விழி வரைந்து
கண் செய்து
காணத்தருவேன்
என் கலை மனதை.



 
தொங்கு பாலம்
கடக்கத் திணறுகிறேன்
மனம் அசைகிறது.



 

யு எழுத உதவுகிறேன்
நிஷித்க்கு
நிஷித் உதவுகிறான்
நான்
கொண்டை ஊசி வளைவொன்றை
கடக்க.





உச்சியிலிருக்கும்
நெளியும் சூரியன்
கீழிருந்து
சிறுகச் சிறுகக்
கரையும் பனிமலை
என் தேசத்தில்

உங்கள் ஊரில்
ஒற்றை வார்த்தை
இந்த
மெழுகுவர்த்தி.


No comments:

Post a Comment