3.6.13

இரண்டு கவிதைகள்



1)
பூ என்பதுவரை புரிந்தது
பேர் தெரியாது
போதும் என்றிருந்தது.


2)
கண்ணாடியினுள்ளிருந்து
ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள்.



2 comments:

  1. ஒரு குருவி மிகவும் ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  2. கண்ணாடியினுள்ளிருந்து
    ஒன்று
    வெளியிலிருந்து ஒன்றாக
    ஒன்றையொன்று
    கொத்திக்கொள்கின்றன
    ஒரு குருவிகள்.

    தோற்றப்பிழையால் மொழியைப் பிழையாய் எழுதவைத்த அழகாக்கிய குருவிக்கும்,தியாகுவின் விரல்களுக்கும் ஒரு முத்தங்கள்.

    ReplyDelete