2.8.13

எனக்குத்தெரிந்து சிறுமிகள்:




எனக்குத்தெரிந்து சிறுமிகள்:

உள்ளங்கை மருதாணி காட்டி
தான் சிவப்பார்கள்


புத்தகத்திடை தோகை பதுக்கி
குட்டி கனவு வளர்ப்பார்கள்

அரிசி மாவில்
பிஞ்சுவிரல் தோய்த்தெடுத்து
வராத கோலத்தையும்
வராந்தா முழுக்க இழுத்து வருவார்கள்

பள்ளி வேன்களின்
சன்னல் தாண்டி கையசைத்து
விடைபெறுகிறேனென்று
உள் பிரவேசிப்பார்கள்,

இன்னும்...

சிறுமிகளைத் தெரிந்திராத
ஒன்றிரண்டு சிறுமிகள்:

சமன் செய்ய கையில்
கழியொன்று பிடித்து
சிதறாது கவனம் முழுவதையும்
ஓரிடம் குவித்து
இப்படி கயிற்றின்மீது நடப்பார்கள்.




No comments:

Post a Comment