12.8.13

இரண்டு கவிதைகள்



1)

முழு நீளத்திலிருந்து
ஒரு முழத்தை
அறுத்தெடுக்கிறது
அவளின்
கை கொண்ட பிளேடு

கண் சிமிட்டும் நேரம்
துடித்தடங்குகிறது சரம்

2)

உலகமே
எனக்கு எதிராய்
திரும்பிவிட்டதைப் போல
எதிர்த்தாற்போலன்றி
முன்
பின்
இடம் வலம்
உடன் வருபவர்
யாரும் இல்லை
இந்த நெடுஞ்சாலையில்
என்
மோட்டார் சைக்கிள்
பயணத்தில்.



No comments:

Post a Comment