29.9.14



ள்ளுவண்டியின் குவியலிலிருந்து
நழுவிச் சரிந்ததொரு பழம்
உருண்டோடுகிறது சாலையில்

கண்டதில் விலகியவை
காணாதபோதும்
மோதாமல் கொள்ளாமலே
கடந்தவை என
சக்கரங்களால்
நேர்ந்துவிடவில்லை சேதம்
எனினும்
பூட்ஸ் ஒன்றன்கீழ் ரசஞ்சிந்த
நசுங்கும்படியானது அது


அடிபட்டுச் சாகிற அபாயமிருந்தும்
போக்குவரத்தினூடே
தாவி விழுந்து
வாரியெடுத்து
வாய் வைக்கிறான்
ஸ்கூட்டிகளில் கடக்கும்
சுடிதார் மூடிய ஏவாள்களின்
கள்ளப் பார்வைகள் தழுவ
தானறியாமலே தன்னை
ஒப்புக்கொடுத்திருக்கிற ஆதாம்

இப்போதோ
விலக்கப்பட்ட அக்கனியை
புசித்திட

அவன்
கண் திறப்பதிலும்
நிர்வாணம் மறைப்பதிலும்
உமக்குச்
சினமுண்டாகாதிருப்பதாக தேவனே.

No comments:

Post a Comment