6.5.15

கரப்பான் கவிதைகள்


1)

அடுத்தடுத்த வரிகளோடு
அலையாது
கவிதையின்
முதல் வரியெனவே
உறைந்து நிற்குமொரு
கரப்பான்

முன்விரியும்
தாளே
தன்னைக் கொல்லும்
சாக்கட்டித் தீற்றலோவெனத்
திகைத்து

2)

தனக்கு
முழுநீளக் கையாக ஆன
துடைப்பம்
ஒன்றில்தான் அறைந்தாள் ஓங்கி

சிறகுகள் நடுங்க
செத்துப்போன கரப்பான்
சற்றைக்கெல்லாம்
சில நூறு கால்களால்
நடந்து
இடம்பெயர்ந்தபோதும்
ஒரு வீறிடல்



No comments:

Post a Comment