21.5.15

இரண்டு கவிதைகள்


1)

கனன்றுகொண்டிருக்கிற
சிறு கங்கு போல
மேலிருந்து
சுடர்ந்திருக்கும் இரவு விளக்கு
ஆரஞ்சு வர்ணம்

அடுத்தடுத்து
உடைகள் நீங்கிய
உடல்களை பார்க்கையில்
தோலுரித்த
சுளைகளேதான் நாம்.


2)

பிளந்து வைக்கப்பட்ட
மாதுளம் பழம்

சிதறி உருளும் எனில்
ந.பெரியசாமியின்
சிவந்த கண்ணீர்த்துளிகள்

அதனறைகளிலேயே வைத்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

தேனடை.

No comments:

Post a Comment