28.5.15

கல் கவிதைகள்


1)

தழுவலின் போதெல்லாம்
தளர்த்திய ஆடைகளை
தன்போக்கில் அடித்துப்போனது
நதியே

கூழாங்கல்லோடு நாம்
காண்பதுதான் என்ன
கல்லொன்றின்
அம்மணம் அல்லவா

2)

கல் தேவதை
கல் ஸ்தனங்கள்

இரங்கவே இரங்காத மனசு
கல்
                                                          
3)

கல் மேலெழும்பவென
குடத்தினுள்
நீர்மேல் நீராய்
வார்த்துக்கொண்டிருக்கிற
மடக் காகம் நான்தான்

கல்
கல்தான்


No comments:

Post a Comment