17.2.12

வயிற்றுக்கு


வெளி குறித்த
பிரக்ஞையேயில்லை
சீட்டைத்தேர்வதில்
முனைந்திருக்கிறது கிளி

பறத்தலும்
கடத்தலும்
அலைதலும் எதற்கோ
எஜமானன் இடுவானில்லையா
வயிற்றுக்கு
நெல்மணி.


2 comments:

  1. ப‌ற‌த்த‌லும் க‌ட‌த்த‌லும் அலைத‌லும‌ற்று வ‌யிற்றுக்கான‌ நெல்ம‌ணி வாய்க்க‌ப் பெறுமெனினும் க‌ம்பிக‌ளும் க‌த‌வுக‌ளுமான‌ கூண்டும், பிய்த்தெறிய‌ப் ப‌டும் வ‌ள‌ர்சிற‌கும் வ‌ருந்த‌வே செய்கின்ற‌ன‌ ந‌ம்மை. தான் அடைப‌ட்டாலும் த‌ன் எஜ‌மான‌ன் வ‌யிற்றுப் பிழைப்புக்கு உத்திர‌வாத‌மாயிருக்கும் உன்ன‌த‌மும் நோக்க‌த்த‌க்க‌தே.

    ReplyDelete
  2. எறும்பு பகிரும் வெல்லக்கட்டி

    தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
    சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
    கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
    குடைகிறது .!
    நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
    அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
    அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
    பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
    பதட்டம்...
    பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
    தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
    வாய்ப்பையும் தந்தது.
    பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
    விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்
    பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
    எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
    இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
    எலிக்கு யோகம்..!
    சுந்தர்ஜி -பரிவின் இசை
    இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
    ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
    கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
    என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
    இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
    அடிக்கிறது!

    ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
    என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
    என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது

    குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
    என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
    எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
    நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...


    அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
    எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
    குழந்தைகள் சுவைப்பார்கள்....
    அம்மாவும் கூட
    காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..

    ReplyDelete