16.8.13

இரண்டு கவிதைகள்




1)
பிரியும் தறுவாய்
நெற்றியில் அழுந்தும்
முத்தம் தாண்டி
என் முகம் ஊர்கிறதுன்
கண்ணீர்

கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருக்கும்
மீன் ஒன்று
ஆவலாய் அசைந்துகொடுக்கிறது
என்னுள்.

2)
நிலவென்று
உன்னை எழுதியெழுதி
பிரித்துவிட்டதன்
நிராதரவில் தேம்பும்
இவ்விரவை
ஒரு
கருப்பு ஸ்டிக்கர் பொட்டை
அணிவதில் தேற்றுகிறாய்.


1 comment:

  1. அழுத்தமான கவிதைகள் இரண்டும்.

    ReplyDelete