27.4.12

கரடி பொம்மை



இளவரசி
அணைத்துத்திரியாததன் வருத்தங்கள்
தன்
பஞ்சு ரோமங்களின் இடுக்குகளில்
தூசென சேகரமாவதில்
வனப்பழிந்து வருகிறது
கரடி பொம்மை

அறையின்
எந்தத்திசையில் அமர்ந்திருந்த போதும்
என்னையே வெறித்தாற்போலிருக்கும்
அதன்
பூஞ்சை படிந்த கண்களில் இல்லை
முந்தைய சோபை

தூக்கிக்கொள்ளச்சொல்லி
முன்னிரண்டு கால்களையும்
நீட்டியே பிடித்திருக்கும் இந்த
கரடிக்குழந்தையை ஏந்திக்கொள்ளவும்
வேண்டும் ஒரு குழந்தை ஆகையால்
அரசி, நாம் ஏன்......


No comments:

Post a Comment