2.4.12

அருவி


a)
பல லட்சம் குவிண்டால்
சர்க்கரையை
சாய்த்துப்பிடித்தாற்போல்
சிந்துகிறது அருவி,
தித்திக்கிறது எண்ணத்தில்.


b)
நீர்தான் விழுகிறதே
கற்றை கற்றையாய்
கன அடிகளாய்,
அருவியெப்படியாகும்
நீர்-வீழ்ச்சி.

c)
இரைச்சல்
காதின் சவ்வைக்கிழிக்கிறது,
அருவி இசைத்தால்
அது
வல்லிசை போல.

d)
எந்த பெரிய கண்ணின்
விளிம்பைக்கடக்கிற கண்ணீர்,
அருவி.

e)
கலவியின் உச்சத்தில்
பீறிடும்
விந்தின் வண்ணம்
அருவி.

f)
நாளை எடுக்கவிருக்கும் நிழற்படத்தில்,
நாளை மறுநாள்
தானொரு
தீம் பார்க்கின்
செயற்கை அருவி என்றே
காண்பித்துக்கொள்ளப்போவதில்லை
ஒரு சட்டத்துக்குள் சரியும் நீர்.

No comments:

Post a Comment