4.12.12

நான் ஏன் இதை நினைத்துக் கொள்கிறேன்


i)
அசையாத விழியோடு
நிழலாடும்
கிளையிலிருந்து
நீங்கியும் நெடு நேரமாயிற்று
பட்சி.

ii)
குழந்தைகள் போடும்
கூச்சலுமே
அமைதியிழக்கச் செய்வது
உன்னை

நான் ஏன் இதை
நினைத்துக் கொள்கிறேன்

விறைப்பேற்றிய பறை
துவங்குகிறது வாசலில்.

No comments:

Post a Comment