13.3.13

இரவு பகல்



கூரைத் துளை வழி
ஒழுகும் சூரியன்
இருள் மண்டிக்கிடக்கும்
அறையின்
தரை சேர்கையில் நிலவு

ஒளிப்பாதையை
மொய்க்கும் தூசுத் துகள்கள்
நக்ஷ்த்ரங்கள்

உள்ளே இரவு
வெளியே பகல்.

[முதல் வரி பிரமிளின் 'பட்டகம்' கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டது]




1 comment: