11.3.12

சாலை ஓவியத்தின், ஓவியனின் குறுக்குவெட்டுத்தோற்றம்




இப்போது பத்தடி நீளம்
உயரங்களுக்கே பழகியிருந்த விஸ்வரூபம்

கண்கள் திறந்திருந்த நிலையிலேயே
உயிர் நீத்திருந்த கடவுளை
பாடையில் கிடத்திமுடித்து
வியர்வையை ஒற்றிக்கொள்கிற நேரம்
உலோக நாணயங்களாய் உருமாறி
மொய்க்கின்றன ஈக்கள்

சுழன்றொரு ஒற்றை ரூபாய் நாணயம்
சரியாய்
கடவுளின் சவத்தின்
நெற்றியில் அமர்கையில்
புன்முறுவல்
சாலை ஓவியனுக்குள்ளிருக்கும்
சாத்தானின் உதட்டில்   

No comments:

Post a Comment