14.3.12

பூ தேன் வண்டு



மில்லியன் இலைகள் அடர்ந்த
இரவின் கொடியில்
விரிந்திருக்கிறது ஒற்றைப்பூ

போகிற போக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும்
தேன்,

தேகத்தில் படிந்துவிட்ட
ஓரிரு துளிகள் மின்ன
அலுமினிய றெக்கை விரித்து
பறந்து போகிறது
கருநீலப்பந்தலின் கீழ்
ஒரு வண்டு

1 comment:

  1. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

    ReplyDelete