பனித்துளி,
புல்லின் விரலில்
வெள்ளிக்கல் மோதிரம்
அணிவிக்கும்
இலைக்கண்ணில்
ஆனந்தக்கண்ணீர் பெருக்கும்
பூவிதழின் சருமத்தில்
முத்தாய் வியர்க்கும்
கொடியில்
கொஞ்ச தூரம் சறுக்கும்.
பனித்துளி,
வயிறு நிரம்ப
வெய்யிலைத்திண்ணும்
வயிறு முட்ட
வெய்யிலைக்குடிக்கும்
வெய்யிலையுடுத்தி மறையும்
பனித்துளி.
கொடியில்
ReplyDeleteகொஞ்ச தூரம் சறுக்கும்.
எல்லா வர்ணனைகளும் அழகென்றாலும் இந்த வரி என்னையும் பனித்துளி கூடவே சறுக்கி வேடிக்கை பார்க்க வைத்தது..
என் அன்பும் நன்றியும் ரிஷபன் ஜி.
ReplyDelete