21.7.11

பிள்ளைகள் ரயில்



பாதங்களில்
சக்கரங்கள் பூட்டிய பாவனைகளில்
பிள்ளைகளே
பெட்டிகளும் பயணிகளுமானதில்
உருள்கிறதொரு தொடர்வண்டி

ஓட்டுநனின் மனம் போன பாதைகளை
தண்டவாளமெனப்பற்றி
அனாயாசமாய் கடக்கிறதது
மெட்ராஸ்
டில்லி
பாம்பே
கல்கத்தா நிலையங்களை

எந்தவூரில்
அதிகம் பனிப்பொழிவிருந்ததெனத்தெரியவில்லை

"அவசரமா ஒண்ணுக்கு போகணும்" என்று
வெளியேறுகிறான் ஒரு பிள்ளை
அல்லது
ஒரு பயணி
அல்லது
கழன்றுகொள்கிறது ஒரு பெட்டி

No comments:

Post a Comment