27.7.11

சற்றுமுன்பு மற்றும் இப்பொழுது




கவிதை வீசாதிருந்ததில்
வியர்த்துக்கொட்ட
சற்று முன் வரை
ஒவ்வாமையின் பிடியிலிருந்த
வெற்றுத்தாளிது,
பேரமைதி சலனித்துவிடாமல்
படபடக்கிறது
பட்டாம்பூச்சியொன்று
விசிறிப்போன கவிதை
சில்லிடலில் சிலிர்த்து.


No comments:

Post a Comment