நிரம்பித்தளும்பும்
திராட்ச மதுவை
தீர்த்தமென தொண்டையில்
சரித்துக்கொள்ளுமக்கணம்தான்
ஆசிர்வாதம் நம்மீது
அடைமழையெனப்பொழிவது.
ஆசிர்வாதத்தின் அழுத்தம் தாளாமல்
தரையில் மல்லாந்து
கண்களால்
இரவு வானத்தை வெறிக்கையில்
இப்படித்தோன்றுகிறது நமக்கு,
அந்த இரண்டு நிலாக்கள்
நமக்கே கட்புலனாதல் போல்
வேறெவர்க்கும்
வாய்ப்பதில்லை நண்பா..
No comments:
Post a Comment