13.7.11

தனதானதென்றெண்ணிய சிறகுகள்



தனதானதென்றெண்ணிய சிறகுகளை
பறித்துக்கொண்ட பகல் கனாவை
சபிப்பவன் தலைக்குள்
மின்னி அணைகின்றன
ஓராயிரம் நட்சத்ரங்கள்

அசூயை தந்த உன்மத்த நிலையில்
அவன்
பள்ளத்தாக்கில் தள்ளி கொல்லத்துணிந்தது
எதையென்றறிந்தால் சிரிப்பீர்கள்,
ஒரு காட்டுப்புறாவை!

கைகள் விட்டெறிய
புறா வானேகுவதில் குழம்பி
சற்றைக்கெல்லாம் தெளிந்து
இவ்வழியேதான் வரவேண்டும்

காத்திருக்க சர் ஐசாக் நியூட்டன் !
அவனின் அனுபவத்திலிருந்து
நீங்கள் புரியவும் ஒன்றுண்டு விதி.

No comments:

Post a Comment