30.9.11

ஸ்னேகம்



தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்,
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்.

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்,
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித்தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றி
பறந்து போகும் குருவிகள்,
அவ்வளவுதான்!


2 comments:

  1. என் மனத்தின்
    முல்லை மொக்கையொத்த
    மென் அலகால்
    வலிக்காமல் தம்மை
    கொத்தித்தின்னவிட்டு
    ரசனையின் பசியாற்றி
    பறந்து போகும் குருவிகள்

    ஆஹா.. ரசனையின் பசி இன்னும் அதிகமாகி விட்டது..

    ReplyDelete
  2. un blogspot i paarththathil mana magizhichi....enbathai naan solli thaan theriya vendiyadillai unakku.... avvalavu aanandham enakku, en anbu nanba vaazhththkkal unakk. anbudan Ka.Annamalai.

    ReplyDelete